வேலையிழப்பை அதிகப்படுத்திய கொரோனா!

கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கொரோனா தொற்றுப் பதிவானது. இதனையடுத்து கொரோனா பரவல் அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போதே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பலரும் தங்களது வேலைகளை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு கொரோனா பரவலின் வேகம் குறைந்தது. இதனால் நிலைமை இயல்புநிலைக்கு வந்துவிட்டது எனும் சூழல் உருவானது. நலிவடைந்த பொருளாதாரமும் மீண்டு வரத் தொடங்கியது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக வீசி வருகிறது. இதன்மூலம் மீண்டும் பொருளாதார நடவடிக்கைள் மீண்டும் முடங்கியுள்ளது.

அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதன்மூலம் பலரும் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். நாட்டின் வேலையிழந்தோர் விகிதம் 7.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 9.87 சதவீதத்தினரும் கிராமப் புறங்களில் 7.13 சதவீதத்தினரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *