குவியும் சடலங்கள்… திணறும் டெல்லி!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

டெல்லியில் மயான கொட்டகைகளில் தினம்தோறும் சடலங்கள் குவிந்து வருகின்றன. இன்று ஒரே நாளில் 381 பேர் பெருந்தொற்றால் இறந்துள்ளதையடுத்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15000-த்தை கடந்துள்ளது.

மயானங்களில் சடலங்கள் குவிந்து வருவதால் அதனை எரிக்க முடியாமல் மயானத்தில் உள்ளவர்கள் திணறி வருகின்றனர். இதனால் சடலங்களை எடுத்து வருவோர் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினசரி அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் டெல்லி அரசு திணறி வருகிறது. இந்த நிலை நீடித்தால் டெல்லியின் நிலை மேலும் மோசமாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *