கொரோனா தொற்றில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு புதிதாக 1,68,912 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 907 ஆக உள்ளது.
தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.