டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதற்காக, மாநில அரசுகளே கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனால், மகாராஷ்டிரா அரசு அதிகமான கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து, டெல்லியிலும் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் அங்கும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.