புனேவில் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த பல பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்காக மாநிலங்கள் தேவையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பூங்காக்கள் பார்கள், விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், டோர் டெலிவரி சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரவு நேர ஊரடங்கு ஒரு வாரத்திற்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு; பிரகாஷ் காரத் 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு….