ஹிமாச்சலில் 153 துறவிகளுக்கு கொரோனா

ஹிமாச்சலில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக 153 துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த துறவிகள் ஹிமாச்சல் பிரதேசத்தில் தர்மசாலாவில் உள்ள சித்பூர் பகுதியின் க்யோட்டோ தந்திரிக் மடாலயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.பிப்ரவரி 23 அன்று முதலில் துறவிகள் பாதிப்புள்ளாக்கான நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,330-ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது சில துறவிகள் கர்நாடகா மற்றும் டெல்லியிலிருந்து புத்தாண்டிற்கு பிறகு மடாலயத்திற்கு வந்தது தெரிய வந்தது.அதில் ஒருவருக்கு நோய் அறிகுறி தீவீரமானதையடுத்து அவர் தண்டா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அந்த பகுதியானது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பகுதியாக மாறியுள்ளது.