பிலிப்பைன்ஸில் புதிதாக 2067 பேருக்கு கொரோனா தொற்று

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் புதிதாக 2067 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 5,80,442-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 47 பேர் புதிதாக பெருந்தொற்றால் இறந்துள்ளனர் இதனால் இறந்தோரின் எண்ணிக்கையானது 12,369-ஐ தொட்டுள்ளது. 144 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,34,463-ஆக அதிகரித்துள்ளது. 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 8 மில்லியன் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து தடுப்பு மருந்து வந்தடையடுத்து பிலிப்பைன்ஸானது கடந்த திங்கள் கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்துவதை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…