சர்வதேச அளவில் உச்சம் தொட்ட பணவீக்கம்..! இந்தியாவின் நிலை என்ன..?
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது.
ஆனால், கடந்த ஏழு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் நீடித்து வந்தது. அதிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணவீக்கம் 7 சதவீதத்துக்கு மேல் நீடித்தது.
இந்நிலையில், ஜூலையில் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.