இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.!

உலகம் முழுவதும் கொரோனா பொது முடக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பல தொழில்கள் முடக்கமடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

பிறகு, படிப்படியாக தங்கம் விலை குறைந்து 34000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 4530 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதன்படி, சவரனுக்கு 72 ரூபாய் குறைர்ந்து 36,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39,536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து 72.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று 72,200 ரூபாயாக ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…