சடுகுடு ஆடும் தங்கம் விலை… விலை உயர்வால் மக்கள் கவலை

உலகம் முழுவதும் கொரோனா பொது முடக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் பல தொழில்கள் முடக்கமடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
பிறகு, படிப்படியாக தங்கம் விலை குறைந்து 34000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, .4,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து ரூ.77,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.