விவசாயிகளுக்கு கிடைத்த விருது; தேசிய விருது நாயகன் நல்லாண்டியின் மகன் பெருமிதம்

உண்மையிலேயே விவசாயியாக வாழ்ந்த எங்கள் தந்தைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது – என தேசிய விருது நாயகன் நல்லாண்டியின் மகன், மகள் நெகிழ்ச்சி பேட்டி

நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் மணிகண்டன் இயக்கி வெளியான கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும்,

இந்த திரைப்படத்தில் கடைசி விவசாயியாக நடித்த பெருங்காமநல்லூரைச் சேர்ந்த நல்லாண்டி என்ற முதியவரின் எதார்த்தமான நடிப்புக்கு சிறப்பு தேசிய விருது என இரு விருதுகளை இந்த கடைசி விவசாயி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது., 

மேலும் விவசாயத்திற்காக கஷ்டப்பட்டவருக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், உண்மையாகவே விவசாயியாக வாழ்ந்தவர், என் அப்பா வாழ்ந்த வாழ்க்கைக்கு விருது கிடைத்தது சந்தோசமாக உள்ளது என அவரது மகள் மொக்கத்தாய் தெரிவித்தார்.,

மேலும் மந்தையில் அமர்ந்திருந்தவரை அழைத்து சென்று நடிக்க வைத்தார்கள், அதன் மூலமும் இது போன்ற விருதுகள் மூலமும் எங்களது தந்தை எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என அவரது மகன் மாயி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *