ரஜினிக்கு வீட்டில் கோவில் கட்டிய வெறித்தனமான ரசிகர்…

வீட்டில் ஒரு அறையை ரஜினி கோவில் என வடிவமைக்கப்பட்டு,  அதனுள் ரஜினியினுடைய புகைப்படங்கள் அனைத்தையும் ஒட்டி வைத்து, ரஜினியின் படத்திற்கு நாள்தோறும் 6 வகையான அபிஷேகங்களை செய்து வரும் பக்தர் –  ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெறும் எனவும் , தொடர்ந்து அவரை மிஞ்சுவதற்கு எவரும் கிடையாது எனவும் பெருமிதம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் தொடர்பு மையம் நடத்திவரும் இளைஞர் கார்த்திக் ஹரிஹரசுதன்(38) என்பவர் தனது 6 வயது முதல் ரஜினியின் ரசிகராகவும், அன்று முதல் அவரை கடவுளாக பாவித்து வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் கார்த்திக்,

கடந்த ஆறு மாத காலமாக தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வரும் கார்த்திக்,  வீட்டின் ஒரு அறையில் ரஜினி கோவில் என பெயரிடப்பட்டு , அந்த அறை முழுவதும் ரஜினி புகைப்படங்கள் அனைத்தையும் ஒட்டி வைத்து,  அண்மையில் வெளியாகும் ரஜினியின் திரைப்படத்தை வைத்து செவ்வாய், வெள்ளி ஆகிய வாரத்தில் இரு நாட்களில் , கோயில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வது போல் , ரஜினியின் படத்திற்கு பால், பன்னீர், இளநீர் , சந்தனம் , தயிர் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்களை செய்து தீப, தூப ஆராதனைகள் நடத்தி, அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதம் வாங்கி வருவதை தொடர்கதையாக நடத்தி வருகிறார்.

மேலும் அவர் பல ஆண்டுகளாக ரஜினியை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ரிஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பிய சான்றினை அறையில் ஒரு பகுதியில் ஒட்டி வைத்து,  ரஜினியை வழிபட்டு வரும் கார்த்திக்,

நாளை(10.08.23) சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஹிமாலய வெற்றி பெறும் என்பதுடன்,  அவருக்கு நிகராக எவரும் சினிமா துறையில் இல்லை எனவும்,  தொடர்ந்து அவருடைய வெற்றிப்படிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். வீட்டில் ரஜினி கோவில் என கார்த்திக் நடத்தி வரும் இந்த பூஜை திருவிழாவை , அப்பகுதி மக்கள் நாள்தோறும் வந்து கண்டு கழித்த வண்ணம் உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *