பிரபல நடிகரின் திரைப்படத்தை தியேட்டர் ஸ்கிரீனை கிழித்து, இருக்கைகளை உடைத்து துவம்சம் செய்த ரசிகர்கள்
நடிகர் பவன் கல்யாண் நடித்து 25 ஆண்டுகள் நிறைவு செய்த தோலி பிரேமா திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் காட்சி வெளியான தியேட்டரில் பாதியிலேயே ஸ்கிரீனை கிழித்து இருக்கைகளை உடைத்து துவம்சம் செய்த ரசிகர்கள்
பவன் கல்யாண் கீர்த்தி ரெட்டி இணைந்து நடித்த தோலி பிரேமா படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் மாநிலம் முழுவதும் பவண் கல்யாண் ரசிகர்களுக்காக ஃப்ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இதனைப் பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் திரண்டு வந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
அவ்வாறு விஜயவாடாவில் உள்ள கபர்தி திரையரங்கில் தோலிபிரேமா இரண்டாவது காட்சியின் போது பவன் கல்யாண் ரசிகர்கள் போன்று படத்தின் நடுவில் பத்து பேர் திடீரென எழுந்து சண்டை போட்டார்கள். திரையில் ஏறி ஸ்கிரினை கிழித்து இருக்கைகளில் ஏறி நின்று உடைத்தனர்.
அப்போது தடுக்க சென்ற ஊழியர்களை தாக்கியும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வெளிப்புற கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. இவை பவன் கல்யாண் ரசிகர்கள் செய்தார்களா அல்லது ரசிகர்கள் பெயரில் அரசியல் பின்புலத்துடன் நடந்ததா என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர் அளித்த புகாரை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பவன் கல்யாண் சில தினங்களாக காக்கிநாடா, பீமாவரம் உள்ளிட்ட இடங்களில் தனது வாராகி யாத்திரையை தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் முதல்வர் ஜெகன்மோகன் குறித்து நேரடியாக விமர்சனங்கள் செய்து வருவதோடு அடுத்து ஆட்சியை கைப்பற்றும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு பதிலாக முதல்வர் ஜெகன் மோகனும் தான் செல்லும் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் குறித்து எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து வெளியான தியேட்டரில் ஸ்கிரினை கிழித்து அடித்து உடைத்த தெரிவித்த சம்பவம் அரசியல் காரணமாகவே நடந்தது என ஜனசேனா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.