சமூகநீதி பேசும் சூர்யாவிடம் இருந்து இப்படி ஒரு செயலா? கொதிப்பில் இணையவாசிகள்..

வெங்கட்ராம்.

நடிகர் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த செய்தி ஊரறிந்தது. அனைவரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளினார்கள். தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த அக்கறையை அது மேலும் வெளிச்சம் போடு காட்டியது. நடிகர் சூர்யாவும் சரி அவர்கள் குடும்பத்தினர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படத்திலும் சரி பொதுவாக சமூக நீதி கருத்துக்கள் எப்போதும் சற்று தூக்கலாகவே இருக்கும். அதனால் முற்போக்காளர்களிடம் சூர்யாவுக்கென்று தனி மரியாதை உண்டானது. சமூக வலைத்தளத்திலும் அவர் செய்த செய்கின்ற நன்மைகளை பற்றின செய்திகள் உலாவி கொண்டே இருக்கும். ஆனால் தற்போது நடந்த ஒரு காரியம் அந்த எண்ணத்தில் ஒரு ஐயத்தை உருவாக்கி உள்ளது. அதாவது சூர்யாவும் அவர்களது குடும்பமும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது அதனை பார்வையிட வந்த சகா பார்வையார்களும் பள்ளி குழந்தைகளும் வெயிலில் அருங்காட்சியகர்த்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *