கட்சி ஒருத்தரால தான் வளராம போச்சு….வேறயாரு என்னால தான் …சரத்குமார் பேச்சு…

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நேற்று (19-03-2023) நடைபெற்றது.கொங்கு மண்டல செயலாளர் சுரேஷ்காந்தி வரவேற்றார். பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் மீண்டும் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அவர் பேசுகையில் “எங்கள் கட்சி வளராததற்கு நானும் ஒரு காரணம்தான். உடன் இருந்தவர்கள் செய்த குழப்பமும் காரணம். இருப்பினும், தொடர்ந்து கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, கட்சியினர் உறுதியுடன் செயல்பட்டால் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு என்று எங்கள் கட்சியினருக்குக் கூறி வருகிறேன்.”என்று கூறினார். இது காலத்திற்கேற்ப முடிவா அல்லது காலம் கடந்த உணர்தலா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *