விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பின் நடித்துள்ளேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், VTV கணேஷ், சதீஷ், ஸ்ரீமன், இயக்குநர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில்,

தளபதி விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பின் ஒரு படம் நடித்துள்ளேன். உங்களை (விஜய்) மாதிரி ஒரு நடிகர் தான், எந்த மொழியில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அன்பாக இருந்தால் தமிழர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

படப்பிடிப்பில் ‘செல்லம், இந்த கண்ணை அருகில் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆனது’ என விஜய் கூறினார். இதுக்கு முன்னாடி இல்லாத ஒன்றாக, எல்லாமே ரசிகர்களுக்காகத்தான் என்று விஜய் நடிக்கிறார். நிறைய பேர் வயதானால் அனுபவம் வரும்… ஆனால் அழகாக மாட்டார்கள். நான் விஜய்யின் பெரிய ரசிகன்.  படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அருமையாக விஜய் நடித்திருக்கிறார்.

வாரிசு நல்ல எண்ணங்கள் உள்ள படம். இந்த கதைக்கு வாரிசு விஜய். தமிழ்நாடு, இந்தியாவுக்கு ரசிகர்கள்தான் வாரிசு என பிரகாஷ்ராஜ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *