அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான், கலைஞர் கருணாநிதியே நிஆச்சர்யப்படுத்திய கலைஞன் – நடிகர் சரத்குமார்
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், VTV கணேஷ், சதீஷ், ஸ்ரீமன், இயக்குநர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் சரத்குமார் பேசுகையில்,
சூரிய வம்சம் படத்தின் 175-வது விழாவில் Future SuperStar Vijay-னு கூறினேன். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவ்விழாவில் கேட்ட போது, உண்மையைத்தான் சொல்கிறேன் என்று பேசினேன். 100 வயதானாலும், விஜய் மேன்மேலும் வளர்வார் என சரத்குமார் பேசினார்.
விழா மேடையில் ஜானி மாஸ்டர் பேசுகையில்,
ரஞ்சிதமே பாடலில் 1 நிமிடம் 20 நொடிகள் விடாமல் ஒரே ஷாட்டில் ஆடி முடித்தார் நடிகர் விஜய். இந்த பாடல் என்னுடைய ரசிகர்களுக்காக நான் செய்வது. அதனால் சிறப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் விஜய் சார் கூறியதாக விழா மேடையில் பேசினார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்.
படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேசுகையில்,
2 வருடங்களுக்கு முன், அந்தமாதிரி இக்கட்டான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளுக்கு நாம்தான் ஆதரவு தர வேண்டும் என விஜய் கூறினார். இதுவரைக்கும் விஜய் சார் படத்தின் வெளியீட்டை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு வாரிசு படத்தின் வெளியீடு இருக்கும் என லலித்குமார் பேசினார்.
இசையமைப்பாளர் தமன் விழா மேடையில் பேசுகையில்,
நான் தளபதி வெறியன். இந்தியாவுக்கு ஆதார் எப்படி முக்கியமோ, அது போல தளபதிக்கு இசையமைப்பது இசையமைப்பாளர்களுக்கு முக்கியம். சென்னையில் பிறந்து வளர்ந்ததில் இன்றுதான் வாழ்க்கை முழுமையடைந்த மாதிரி இருக்கு என்று மேடையில் தமன் கண்ணீர் விட்டு அழுதார்.
வாழ்க்கை முழுவதும் நான் தளபதி ரசிகன்தான். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.