நடிகை பவுலின் தற்கொலை விவகாரம்: சிக்குவாரா தயாரிப்பாளர்?

ஆந்திர மாநிலம் சித்தூர் சத்யவேடு பகுதியை சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா (வயது29). இவர் சென்னை நெற்குன்றம் அன்னம்மாள் நகர் மல்லிகை அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மதியம் தனது வீட்டின் படுக்கையறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுமுக நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோயம்பேடு போலீசார் ஜெசிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பட தயாரிப்பாளர் சிராஜ் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இருப்பினும் சினிமா பட தயாரிப்பாளர் சிராஜ் இன்னும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் தயாரிப்பாளர் நண்பர் பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜெசிகாவின் 3 போன், ஒரு கேட் உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளன.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஐ போன் தயாரிப்பாளர் வாங்கி கொடுத்தாகவும், அதைனை எடுத்து வர சொன்னதாக கூறியுள்ளார். இருப்பினும், சினிமா பட தயாரிப்பாளர் சிராஜ் ஆஜராகாமல் இருப்பதால் ஜெசிகா மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *