தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று தொடக்கம்!!
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினத்தில் தொடங்கியுள்ளது.
சென்னை வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் வசந்தம் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்வின் முடிவுகளாகனது இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.