கூழாங்கல் சிறந்த திரைப்படம்: விருது அறிவித்த புதுச்சேரி அரசு..!!

சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி அரசின் விருதை கூழாங்கல் திரைப்படம் பெறப்போகிறது. புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் திரைப்பட விழா நடைபெறும்.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத இருந்த இந்த விழா இந்த ஆண்டு வரும் 9ஆம் தேதி துவங்குகிறது. அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார். 

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் சிறந்த திரைப்படத்திற்கான இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படமாக கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்கா் விருது போட்டியிலிருந்து 'கூழாங்கல்' திரைப்படம் வெளியேற்றம்- Dinamani

எளிமையான மக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.  அறிமுக இயக்குனரான பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஜெயா.

தற்போது புதுச்சேரி அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினை 9ஆம் தேதி மாலை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *