சாய்பல்லவி செய்த செயல்!! ஷாக்கான ரசிகர்கள்!!

மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி போனார். மலையாளம், தமிழ் மொழிகளை தாண்டி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி.

இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மாரி-2,என்.ஜி.கே ஆகிய படங்களிலும், ‘பாவ கதைகள்’ எனும் வேப் தொடரிலும் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த கார்கி படமானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது குடும்பத்தினருடன் வந்திருந்த சாய் பல்லவி, தன்னை யாரும் அடையாளர் கண்டு விடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்த படி, சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் பாதுகாப்புக்கு சென்ற காவலர்கள் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முகக்கவசத்தை கழற்றிய போது தான் அது சாய் பல்லவி என்பது தெரிய வந்தது.இத்தகைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *