புதிய நெறிமுறைகள்: கட்டுப்பாட்டில் தெலுங்கு திரைத்துறை..!!
தெலுங்கு திரைத்துறையில் பல புதிய நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக நடிகர்களின் ஊதியம் குறித்த பல புதிய நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளனர். கலைஞர்களுக்கு அவர்கள் படத்தின் பணிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு நாளும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அனைத்து வகையான கட்டணங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் முடிக்கப்பட வேண்டும்.
படத்தில் இடம்பெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஊதியம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மேலும், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் கட்டாயமாகக் குறைந்தது 8 வாரங்கள் திரையிடப்பட வேண்டும். குறிப்பாகப் படங்களின் அறிவிப்பின் போது செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் பார்ட்னர் விவரங்களை அறிவிக்கக் கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளனர்.
இந்த புதிய நெறிமுறைகளை இந்த செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வரவுள்ளது.ஓடிடி வருகையால் மக்களிடம் ரசனை மாற்றம் ஏற்பட்டிருப்பது ஒருவகையில் நன்மையாக இருந்தாலும், ரசிகர்கள் பகிரங்கமாக வெளிநடப்பு செய்வதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் டிஜிட்டல் தொடர்பான புதிய விதியை வகுத்துள்ளனர். இந்த புதிய மாற்றங்கள் பான் இந்திய படங்களாக வெளியாகும் படங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.