கனல் கண்ண்னுகு ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்துமுன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தின் போது பெரியார் சிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இரு பிரிவினரிடையே கலக்கம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான ஜாமீனை தள்ளுபடி செய்தார்.
இந்த சூழலில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.