புகார் கொடுத்த அமலாபால்: மோசடியில் சிக்கிய முக்கிய தயாரிப்பாளர்..!!

பவ்நிந்தர் தத் என்பவர் தொழில் செய்வதாக கூறி என்னிடம்  ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் அமலாபால்  புகார் அளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால்.

2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து படங்களில் பிசியாக அமலாபால் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் பவ்நீந்தர்சிங்தத் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அமலாபாலின் புகார் மனுவின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பவ்நிந்தர் தத் மீது 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அமலாபால் மீது பவ்நிந்தர் தத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *