சர்ச்சையில் சிக்கிய தேவரகொண்டா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கிண்டல் செய்த தேவரகொண்டா ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுயா பரத்வாஜ், மீண்டும் லைகர் படம் குறித்து விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்து புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக கலக்கியவர் தான் இந்த அனசுயா பரத்வாஜ். இவர் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் குறித்து விமர்சித்ததால், 5 வருடங்களுக்கு முன்பே விஜய் தேவரகொண்டா ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள லிகர் படமும் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், அனசுயா பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தாயின் வலி எப்போதும் நீங்காது என்றும், நாம் செய்த வினை எவ்வளவு காலமானாலும் நமக்கே திருப்பி வரும்” என்றும் லிகர் பட தோல்வியைக் குத்திக் காட்டும் விதமாக பதிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், அனசுயாவை “ஆண்ட்டி” என்று கிண்டல் செய்து அதை ட்ரெண்ட் ஆக்கியும் விட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அனசுயா, தன்னை ட்ரோல் செய்பவர்களின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணின் வயதையோ உருவத்தையோ கேலி செய்வது மிகப்பெரிய தவறு என்று பலர் அனசுயாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *