கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இந்துமுன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தின் போது பெரியார் சிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இரு பிரிவினரிடையே கலக்கம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரர் தரப்பில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி பிறரையும் தூண்டும் வண்ணம் பேசியிருப்பது திட்டமிட்டே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக வாதிட்டார்.
அதோடு வெறுப்பு பேச்சு தான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. எனவே மனுதார் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேம்டும் என்று வாதிடப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.