புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம்: பூஜையுடன் இன்று தொடக்கம் !

தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அன்மையில் வெளிவந்த புஷ்பா படமானது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது குறிப்பாக ராஷ்மிகாவிற்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்ற பாடல் மாஸ் காட்டியது.

அதோடு சமந்தாவுடன் ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல் வைரல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அல்லு அர்ஜுன்னு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இன்றைய தினத்தில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவுடன், ஃபஹத் பாசிலும் மீண்டும் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *