செக் மோசடி வழக்கு: இயக்குனர் லிங்குசாமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவான படம் எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் ரூ.1.30 கோடி கடனை பெற்றத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அடுத்த படங்களை தயாரித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நிறுவனத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது.
இதன் காரணமாக இயக்குநர் லிங்குசாமி ரூ.1.30 கோடி மதிப்பில் செக் வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது.
இதனிடையே பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் செக் மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.
அப்போது பேசிய நீதிபதி செக் மோசடி செய்த குற்றத்திற்காக இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுமாத சிறை தண்டனை வழங்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.