விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்..! பாராட்டும் ரசிகர்கள்..!!

கேரள மாநில விவசாய துறை சார்பில் நடைபெற்ற விவசாய தின விழாவில் நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயராம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணை நடத்தி வருகிறார்.

இந்த பண்ணைக்கு ஆனந்த் பண்ணை என்று பெயர் வைத்துள்ளார். சுமார் 8 ஏக்கர் நிலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை ஜெயராம் தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். 

இதுக் குறித்து பல செய்திகள், பேட்டிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கவுரவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருதை விட உயர்ந்ததாக நினைக்கிறேன் ' சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர்  ஜெயராம்!| Best Farmer award-winning actor Jayaram; Loved agriculture since  childhood

கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் 2 தினங்களுக்கு முன்பு விவசாய தின விழா நடைபெற்றது. இதில் சிறந்த விவசாயி என்ற விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜெயராம் செய்து வரும் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில் பேசிய நடிகர் ஜெயராம் பத்ம ஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து முதல்வருக்கும் கேரள மாநில அரசுக்கும் நடிகர் ஜெயராம் தனது நன்றியை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *