ராக்கெட்ரி தி நம்பி விளைவு படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம் – மாதவன்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் ‘ராக்கெட்ரி தி நம்பி விளைவு’. மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாதவன் அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
‘ராக்கெட்ரி படத்தை எடுப்பதற்கு மாதவன் தனது வீட்டை விற்றதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை மறுத்த மாதவன் தயவு செய்து யாரும் என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக எனக்கு சொந்தமாக ஒரு வீடு கிடையாது. நான் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறேன். இந்த முறை இந்தப் படத்துக்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டும் என எனது மனைவி என்னிடம் உறுதி வழங்கியுள்ளார்.