இனி நான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த போவதில்லை – பாகுபலி வில்லன்
தெலுங்கில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் பாகுபலி வில்லன் ராணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தும் திடீரென டெலிட் செய்துள்ளார்.
அவரது இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4.7 மில்லியன் ஃபாலோயர்கள் ராணாவுக்கு உள்ளார்கள். இருக்கிறார்.
அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘விராட பர்வம்’ படம் சுமாராகத்தான் ஓடியது. அப்படத்தின் பிரமோஷனுக்கு பிறகு அவர் மீடியா பக்கம் வரவில்லை. இந்நிலையில் ராணா தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை மனைவி மிஹீகாவுடன் கொண்டாடியுள்ளார்.
தற்போது இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தங்களது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் ராணாவின் மனைவி மிஹீகா பதிவிட்டுள்ளார்.
அதில் தனது கணவர் ராணாவையும் ‘டேக்’ செய்துள்ளார். தனது இன்ஸ்டாவில் அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்துள்ள ராணா தனது திருமண நாள் கொண்டாட்டம் புகைப்படங்களை கூட அவரது கணக்கில் பதிவிடவில்லை. ‘விராட பர்வம்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்க ராணா இன்னும் சம்மதிக்கவில்லை.