டெல்லிக்கு பறந்த ஜெயிலர்..!! மாஸ் காட்டப்போகும் சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 169 வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.

ரஜினியின் 'தலைவர் 169' படத்தில் இணையும் அண்டை மாநில சூப்பர் ஸ்டார்! - தமிழ்  News - IndiaGlitz.com

மேலும் ராக்கி, தரமணி புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டுள்ளார். 

டெல்லியில் நடைபெற உள்ள ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. பத்து நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *