மிரட்டலை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி..!!
அண்மையில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில் பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலாவைப் போல நீங்களும் கொல்லப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிரட்டலை தொடர்ந்து நடிகர் சல்மான் கான், மும்பை காவல் துறையில் புகார் அளித்தார்.இதையடுத்து அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியது காவல்துறை.
மேலும் பொது வெளியில் சுற்றுவதை குறைக்கவும் காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. இதன்பின் நடிகர் சல்மான் கான் மும்பை காவல் துறையிடம் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல்துறை வழங்கியுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறை களுக்குப் பின்னர் அவருக்கு துப்பாக்கிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதங்கள் பின்னணியில் தற்காப்புக்காக ஆயுத உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர் சல்மான் கானுக்கு ஆயுத உரிமம் வழங்கப்பட்டுள்ளது என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.