சிம்புக்கு நன்றி சொல்லிய ஹன்சிகா: எதற்காக தெரியுமா?

சிறந்த நடிகை என்ற இடத்தில் ஹன்சிகா மோட்வானி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். ஹிந்தி படம் மூலம் ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கையானது தெலுங்கு படம் மூலம் முன்னணிக்கு வந்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் சூர்யா, விஜய், சிவகார்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார். தற்போது ஹன்சிகா நடித்த மகா திரைப்படம் இன்று வெளியான நிலையில் இவருக்கு 50-வது படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹன்சிகா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மகா படமானது தனக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததாகவும், சினிமாதான் தனது வாழ்க்கை என்றும் இந்தப்படத்தில் காமெடி, எமோஷனல் போன்றவற்றிற்கு 100% இருப்பதாக கூறியுள்ளார்.

அதோடு என்னுடைய நண்பராக இருக்கும் சிம்புவுக்கு நன்றியை கூறுவது மற்றுமல்லாமல் படத்திற்கு தூண்களாக இருக்கும் மாலிக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *