அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!! உதவி கரம் நீட்டிய  நடிகர் அமீர்கான்..!!

அசாம் மாநிலத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பிரம்ம புத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 

இதில் சுமார் 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய மாநில மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Aamir Khan extends help to CM Relief Fund amid Assam flood crisis, CM  Himanta Biswas Sarma thanks him! - Popdiaries

குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் ரூ. 25 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இது குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முன்னணி பாலிவுட் நட்சத்திரமான அமீர் கான் அசாம் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அமிர்கான் தற்போது லால் சிங் சத்தா என்ற படத்தை முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *