ஆஸ்கார் நாயகன் மீது பாலியல் வழக்கு..!!  பால் ஹக்கீஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற இயக்குனர் பால் ஹக்கீஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு பால் ஹக்கீஸ் கிராஷ் என்ற படத்தில் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றவர்.

மேலும் அந்த படத்தை தயாரித்ததற்காக சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது வென்றார்.  இவர் இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவிற்கு சென்ற போது இளம் பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து இத்தாலி காவல்துறையினர் பால் ஹக்கீஸை கைது செய்து செய்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர் ஹக்கிஸை சிறையில் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தனர்.

அதிர்ச்சி! ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் பாலியல் புகாரில் கைது! போலீசார்  அதிரடி!

இத்தாலி சட்டத்தின் கீழ் நான் ஆதாரங்களை விவாதிக்க முடியாது. இது குறித்து அவரின் வழக்கறிஞர் பிரியா சவுத்ரி கூறுகையில் பால் ஹக்கீஸ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிச்சயம் நிராகரிக்கப்படும்.

விசாரணை முடிந்த பின்பு அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பால் ஹக்கீஸ் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு  பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு  பால் ஹக்கீஸ் அந்த பெண்களில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாக கூறி அதிர வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *