உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்- நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017இல் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து பிரிந்தனர்.

இதற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இருப்பினும் இருவரும் தாங்கள் பிரிவது குறித்து தெளிவாக இருந்தனர். எனினும் தொடர்ந்து சமந்தாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்தபடியே இருக்கிறது. 

இந்நிலையில் இருவரும் பிரிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது சமந்தா ட்விட்டரில் இது குறித்து பதிவு வெளியிட்டு உள்ளார். பெண்களுக்கு எதிரான வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும் எனும் மனநிலை இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். நீங்களும் உங்கள் பணிகளை கவனியுங்கள். குறிப்பாக உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று நெட்டிசன்களுக்கு நடிகை சமந்தா கூறி அனைவருக்கும் தக்க பதில் அளித்துள்ளார் என அவரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *