தொடரும் திரையுலக தற்கொலைகள்..!! ஒடிசா மாநிலத்தில் சீரியல் நடிகை தற்கொலை..!!
கடந்த ஒரு மாதமாக திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நய பள்ளி கட்சாஹியில் உள்ள வாடகை வீட்டில் ஒடியா மொழி டிவி சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா என்பவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது மக்கள் இடையே மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீட்டு உரிமையாளர் அளித்த தகவல் பேரில் ஜகத்சிங்பூர் போலீசார், ரஷ்மிரேகா ஓஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர்.
மேலும் அங்கிருந்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் நடிகை ரஷ்மிரேகா ஓஜா எழுதிய தற்கொலை குறிப்பு கடிதத்தில் யாருடைய நிர்பந்தத்தில் தான் சாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்பது தற்கொலைக் குறிப்பு கடிதத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிட்டார்.
திரோல் பகுதியைச் சேர்ந்த ரஷ்மிரேகா தனது ஆண் நண்பருடன் கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.