விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் பாகம்-2!

தமிழில் பல வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன், உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம், தல அஜீத் குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்ஸின் காஞ்சனா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வந்தது. சுந்தர் சி யின் அரண்மனை படத்தில் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது மூன்றாம் பாகமும் தயாராகி உள்ளது. ஆர்யாவின் டெடி, விஜய் சேதுபதியின் சூது கவ்வும், உள்ளிட்ட மேலும் சில படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராக உள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் ஆகியோர் நடித்து சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான துக்ளக் தர்பார் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளதாக இயக்குனர் பிரசாத் தீனதயாளன் அறிவித்துள்ளார். மேலும் துக்ளக் தர்பார் படத்தின் பாகம்-1 படமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அரசியல் கதையம்சம் உள்ள படமாக அமைந்துள்ளது.
