அண்ணாத்த படத்தின் டப்பிங் தொடங்கியது!

ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்துக்கொடுத்தார். தற்போது ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ரஜினிகாந்த் ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசினார். கிராபிக்ஸ் இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பிற தொழில்நுட்ப பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன.

தீபாவளி பண்டிகையில் ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை சிவா இயக்குகிறார். அண்ணாத்த பட வேலைகள் முடிந்ததும் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…