மீண்டும் இணையும் மோகன் லால் – ஜித்து ஜோசப் கூட்டணி

கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன் லால் – ஜித்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் படம் வெளியானது.
திரில்லர் படமாக எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, மூன்றாம் பாகம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மோகன் லால் – ஜித்து ஜோசப் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் இல்லை எனவும் வேறு ஒரு த்ரில்லர் படம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.