’சபாஷ் மித்து’ படத்தின் இயக்குனர் திடீர் விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்த உலக அளவில் முன்னணி அணியாக இருப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் மிதாலி ராஜ்.

ஆண்கள் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை மட்டும் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், அதனை மாற்றி பெண்கள் கிரிக்கெட் போட்டிகளையும் ரசிகர்கள் எதிர்பார்க்கக் காரணமாக இருந்தவர்.

1999 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி தனது 16 ஆவது வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

அவரது சாதனைகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்க்கை படமாக எடுக்கப்படும் என 2019 ஆம் ஆண்டு மிதாலிராஜின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப்படத்தில் மிதாலிராஜாக நடிகை டாப்ஸி நடத்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை ராகுல் தொலாகியா இயக்கிக் கொண்டிருந்தார். படத்திற்கு ’சபாஷ் மித்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக ராகுல் தொலாகியா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *