மகளின் ஒற்றை வரிக் கதையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராகும் நடிகர்

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்தவர்.

இவர் 2019 ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ என்ற தனது முதல் படத்தை மலையாளத்தில் இயக்கியிருந்தார்.

லூசிபர் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு, பிருத்விராஜ் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், தனது மகள் சொன்ன ஒற்றை வரிக் கதையில் ஈர்க்கப்பட்டு மீண்டும் படம் இயக்குவதில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

ஆனால், அந்த கதையைத் தற்போது படமாக எடுக்க முடியாத நிலை உள்ளதால், வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *