பிறந்தநாள் பரிசாக நடிகர் கார்த்தி ரசிகர்களிடம் என்ன கேட்டார் தெரியுமா?

இன்று ஆகஸ்ட் 25-ல் பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதில் அவர்கூறியிருப்பதாவது , அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.