ஒரு இயக்குநரின் படத்தில் மற்றொரு இயக்குநர்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அசுரன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் சூரி தான் நாயகன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனனும் இணைந்துள்ளார். இதிலும், அவர் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.