மீண்டும் ஓ.டி.டியை நோக்கி படையெடுக்கும் படங்கள்

தமிழகத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியுள்ளது.

இதனையடுத்து, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. திரையரங்கத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால், புதுப்படங்கள் திரையரங்கத்திற்கு வராமல் ஓ.டி.டி தளங்களில் வெளியாக முடிவு செய்யப்படுகிறது.

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில், சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராங்கி’. நாயகியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இதில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரண்டு படங்களும் திரையரங்கத்தில் வெளியாகாமல் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…