பிரபல நடிகையை அடித்து துன்புறுத்தும் எஸ்.ஐ. கணவர்.. காவல் நிலையத்தில் புகார்!

தமிழ் திரைப்பட நடிகை ராதா, தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட எஸ்.ஐ தினமும் அடித்து துன்புறுத்தி வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு நடிகர் முரளி, வடிவேலு நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்ற இந்த திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்தது. இந்த படத்தில் நடிகையாக நடித்திருந்தவர் ராதா. இதனையடுத்து அடாவடி, காத்தவராயன் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் சினிமாவில் இருந்து விலகி தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டுதயாரிப்பாளரான கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் உதவி காவல் ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட வசந்தராஜா, கடந்த ஒரு வருடமாக சாலிகிராமத்தில் ராதாவுடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் தனது முதல் மனைவி மற்றும் தனது இரு குழந்தைகளை ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் தங்க வைத்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறிவந்த வசந்தராஜா, நடிகை ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து கணவர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ராதா. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து எஸ்.ஐ வசந்தராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…