முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிகுமார்?

‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கை, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளியான, ‘முந்தானை முடிச்சு’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்தப் படத்தில், ஊர்வசி, தீபா, ‘பசி’ சத்யா உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் ரீமேக் ஆகிறது. இதன் கதை, திரைக்கதை, வசனத்தை கே.பாக்யராஜ் எழுதுகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.
ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா படத்த இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.