அடுத்த சித்தி வரலட்சிமியா?

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு அந்த தொடரின் இரண்டாவது பாகம் ‘சித்தி 2’ என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதிலும், ராதிகா தான் சித்தியாக நடித்து வந்தார்.

ஆனால், தன் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதால் ‘சித்தி 2’ தொடரில் இருந்து விலகுவதாக ராதிகா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, யார் அடுத்த சித்தி என்ற ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது.

அடுத்த சித்தியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பலர் தெரிவித்தாலும், இவருடன் சேர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் பெயரும் அடிபட்டது. ஆனால்வரலட்சுமி, ”நான் சித்தியாக நடிக்கவில்லை; அந்தத் தகவல் பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…