காதலனுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் சிறுமி தற்கொலை

உரிய வயதில்லாததால் திருமணம் செய்தவருடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் பல்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுமி தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் மருதப்பாண்டி. இவரது மகள் (வயது 17). இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த காளிராஜ் என்பவரை காதலித்து திருமணம் முடித்துள்ளார். ஆனால் 18 வயது ஆகாததால் அவரை சேத்தூர் காவல்நிலைய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் பெற்றோர் அவரை ஏற்க மறுத்தனர்.இதனையடுத்து  விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் நடத்தும் பல்நோக்கு இல்லத்தில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காளீஸ்வரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதனால் மருதபாண்டியின் மகள மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை அவரது அறையில் இருந்த பேனில்  துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  காலை வெகு நேரமாகியும் கதவைத் திறக்காததால் இல்ல பணியாளர் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தார். 

கண்காணிப்பாளர் ஜஸ்டின் விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக  விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *